Monday, 17 December 2012

மதம் வகுப்பு விலகி தேசியம் பேசு அது நாட்டுப்பற்று!

   All Job Advices Sites  
   Recent verses:       மூளைநிலை ஆய்வில் கருஆன கவிதைகள்!

            
             
              மதம் வகுப்பு விலகி தேசியம் பேசு அது நாட்டுப்பற்று!
 
எடுப்பு:

கல்லே!கல், எச்சிலையும் கல்லே... கடவுளில்லை!
புல்லே! எதையும் புனிதமெனத் தேயாதே
!
எல்லை யிலாப்பொய்யால் ஏய்க்கும் மதம்விலகி
...
கல்லல்செய் காயம் ஒளிரும்
!

உடைப்பு:

தூசுகள் அடர்ந்த காற்றில் - சுவாசமே,
தூய்மை யாக இல்லை
!
மாசுகள் படிந்த மதத்தில் - மனிதனும்
,
மனித னாக இல்லை
!

ஆசைகள் பண்பில் வேண்டும் - அனைவரும்
அன்பிலே இணைய வேண்டும்!
ஓசையாய் உறக்கம் வேண்டும் - அதற்கு
,
ஒற்றுமை ஒழுக்கம் வேண்டும்
!  

பூசல்கள் நாசம் அழிய - கொள்கையில்,
பொதுவான நீதி வேண்டும்
!
பாசமும் பரிவும்ஒன்ற - அதிலே
,
பகைகளும் புகையும் போகுமே
!

தூசுகள் சாதிகள் விலகி - உயர்வுற
தூய்மையில் தேசம் வேண்டும்!
மாசுடன் பேதங்கள்ஓதும் - மதம்விலகி
,
தேசியம் பேச வேண்டும்!
 







If you want true democracy...

Work for peoples' unity;

If we fail to make it, immediately;

In future one day, suddenly...

Our generation will miss country!

                                                             
                                                               [Next] 








 
 
 

நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
                                                                   

No comments:

Post a Comment