|
கவிதைச் சிட்டுக்கு வாழ்த்தும், எதிர்பார்ப்பும்!
எழில்,
உதவிப்
பொறியாளர்,
பொதுப்பணித்துறை, சென்னை-5.
(கவிதைச்சிட்டு, நவம்பர் 1990
மாத இதழில் பிரசுரமானது)
Go Labels: Readers in Kavithai Chittu [Part V] [Page-2]
[Name: Monica Duboise] [Newness]
உங்கள் முதல்இதழ் பிரசவித்தபோதே, நம்பிக்கையும் சுடர்விடத் துவங்கியது. சிறிய முயற்சிதான் என்றாலும், சீரானவளர்ச்சி கண்களில் தென்பட்டது. இந்தக்குழந்தை நடைபழகும் முன்னமேயே அதற்கான பாதையை வகுக்கும் பொறுப்பாளர்களுக்கு, வாசகன் என்றநிலையில் என்னுடைய வாழ்த்துக்களையும் விமர்சகன் என்றமுறையில் எதிர்பார்ப்புக்களையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
தமிழகத்தில் இன்றைய கலைஇலக்கிய சூழல்என்பதே ஆபத்தாகவும், அறுவருப்பாகவும் இருக்கின்றது. தமிழ் கலைஇலக்கிய ஊடகங்களான செய்தித்தாட்கள், சினிமா இவ்விரண்டிலும் நல்ல தகவல்இதழ்கள், சிறந்த சினிமா என்பது அத்திப் பூத்தாற்போலவே தென்படுகின்றன. அப்படி சிலநேரங்களில் தவறிவருபவைகளும் நாட்டின் ஒற்றுமைக்கும், வெகுசனங்களின் (மக்களின்) நலன்களுக்கும் அந்நியமாகவே உள்ளன. ஆனாலும் இவ்விரண்டு சாதனங்களைத் தவிர்த்து ஆங்காங்கே முற்போக்கான கலைஇலக்கியப் பணிகள் சிலபல இளைஞர்குளுக்களால் வீதிநாடகங்கள், சிறுபத்திரிக்கைகள் புத்தகவெளியீடுகள் போன்ற முயற்சிகளால் நடந்துவருகின்றன. இதனிடையே மலைகள்மேல், விடாதுஎரிந்திடும் காடுகளைநோக்கிச் சுழன்றடித்திடும் காற்றேபோன்று மக்களிடையே மதம், வகுப்பு பேதப்பிளவுகளை ஊதுதல், நெய்விடுதல்கள் மூலம் மேற்கொள்ளும் சில தீயசக்திகளின் ஓயாத பிரச்சாரங்களால் ஒற்றுமையின்மை நிரந்தரப்படுத்தப்பட்டு, அமைதியற்ற சூழலும் மிகமோசமாக தொடர்ந்து இருந்துவருகின்றன. நிழற்படகலைத் துறையும் (சினிமா, சின்னத்திரை வகையறா), மற்றும் தினசரி, வார, மாத செய்திஏடுகளும், இச்சூழலை மேன்மேலும் மாசுபடுத்திக்கொண்டே வருகின்றன. எந்தவோர் நிகழ்விலும் கடவுள் இருப்பதுபோன்று ஆர்ப்பாட்டமாக பிரமிப்பை ஏற்படுத்திட பூசைகளைச்செய்து விளம்பரப்படுத்துகிறவர்கள் அடுத்தடுத்து புரிகின்ற தவறுகளைப்பற்றி சிந்திப்பதாகவே தெரியவில்லை. இவற்றுள் சினிமா என்பது (விலக்காக ஒருசிலதவிர), பெண்களின் அந்தரங்கங்களை காட்சிகளாக்கி அர்பணிக்கின்ற வேலைகளையே பிதானமாக்கிக் கொண்டிருக்கிறது. வெகுசன பத்திரிகைகளிலோ நாங்களும் சளைத்தவர்களல்ல என்பதுபோல் பல, மூளைஅளவிலும் மனநிலையிலும் பெரிதும் ஊனமுற்ற அவதார பிறவிகளாக செயற்படுகின்றன. சினிமா மற்றும் பத்திரிக்கைத் துறைகளில் பெரும்பாலானவை, நம் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் காதல்என்னும் உணர்வே பிரதானமானது என்பதுபோலவும் ஒருமாயையை மண்டையில் ஏற்றுவதற்காகவே வேப்பிலைகளை தொடர்ந்து அடிக்கின்றன. அதனால், அணுப்பிளவோ, அணுப்பிணைப்போ, மனிதஒற்றுமையோ, கடல்அரிப்போ, காடுகள்அழிப்போ, எரிசக்திக்குறைவோ, சுற்றுச்சுகாதாரமோ, தொற்றுநோய்களோ ஆக இவைப்போன்ற எந்தப்பிரச்சினைகளிலும் மற்றும் அவற்றின் விளைவுகள்பற்றியும் இன்னும் நம்இளைஞர்கள் (உலகநலன் மீது அக்கறைஉள்ள சிலரைத்தவிர) எவரும் முழுமையாக அறிந்து சமூகக்கடமைகளைத் தெரிந்து உணர்வுகளுடன் மக்கள்தொண்டாற்ற முற்படுவதில்லை. இதனிடையே இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒவ்வொருநாளிலும் எங்காவது, மதக்கலவரங்கள், வகுப்பு மற்றும் நிறவெறிமோதல்கள், மசூதி ஆலய இடிப்புக்கள், பிணஊர்வலங்கள்; இதனால் நாட்டின் ஒற்றுமையும், அண்டைநாடுகளின் அடாவடித்தனமும், மனிதசமுதாயத்தின் நாகரிகமும், ஆரோக்கியமும், வெகுவாகக்குன்றி மரணமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலைமைகளினூடே எண்ணற்ற மானுடஉயிர்கள் மகாத்மா காந்தியின் புகைப்பட நகல்களாக வெற்றுடம்புகளுடன் திரிகிற நிலைமையில், தினம்தினம் போகிகளின் பண்டிகைகளே போல் புகையிலைகளை சுருட்டி நெருப்பிட்டுப் புகைப்பதும் (பீடி சிகரெட் பிடிப்பதும்) பட்டாசுகளை கொளுத்துவதும் அந்தப்படிக்கு உலக வெப்பமயமாதலை கூடுதலாக்கி உட்ணம் ஏற்படுத்துவதும் மற்றும் ஓசோன்படலத்தை ஓட்டைவிழச் செய்வதற்கும் துருவப்பிரதேசங்களின் பனிப்பாறைகள் உருகவும்வேண்டும் என்பதற்காகவே பிறவி எடுத்தவர்களைப்போல் உலகஉயிகட்கும் (உலகத்துக்கும்) அவர்களுக்கும் சம்பந்தமேஇல்லை என்பதுபோன்றும் அட்டகாசங்களை மதம் என்ற பெயரிலும் செய்து கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் எதிர்த்துக் குரல்கொடுக்கப் போவது யார்? கைகளைஉயர்த்த முன்வருவது யார்? உங்களின் கவிதைச்சிட்டு மாத செய்திமற்றும் தகவல்இதழுக்கு, நாட்டுப்பற்றற்ற காதல்களை கவிதைகளாக எழுதித் தள்ளினால்மட்டும் போதாது... மேலே விவரித்திட்டபடி உலகம், மக்கள்ஒற்றுமை, மானுடசமூகநலம் ஆகியவற்றின் மீதான சிந்தனைகள் மற்றும் கடமைகளின்பாலுள்ள பங்கு என்ன? தொடரும் உங்கள் படைப்புக்கள் பதில் சொல்லட்டும்!
பெண்ணடிமைக்களமே!
அவன்:
அப்பா... எப்படியோ வாய்திறந்து என்னிடம் சிரித்துப்பேசி விட்டாய்! கவிதையை நீயே படி நானும் உன்மகிழ்ச்சியைப் பகிர்ந்து
கொள்கின்றேன்
அவள் :
சரி படிக்கின்றேன் கேளுங்கள்...
கவிதைத் தலைப்பு,
சாதிமதம்
விலகு
அழியுமே... பெண்ணடிமைக்
களமே!
[தொடர்சியைக்
காண்பி]
View also:
new comments on the
post ". "தமிழ் மன்றம்" .: தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்து...":
|
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
தீண்டு:
Say 'No to Caste based Reservation in
EducationJobs etc. but on professionally basis - A new
doctrine.
அறிவியல்சார்ந்த கவிதைகள்:
சொடுக்கு :
அழாச்சுளை உண்ணும் அறிவே!
|
No comments:
Post a Comment