Monday 27 May 2013

கன்னங்களால் அழைக்கின்றாய்! என்னதான் நினைக்கின்றாய்...?


Anbu shivakumar's profile photo Photos:  Anbu shivakumar



கன்னங்களால் அழைக்கின்றாய் உன்றன்
கவிதைகள் ஏடு, இதோ இங்கேபடி என்று...
கண்களால்  சிரிக்கின்றாய்! சுவைவாய்தளம்காட்டி,
கற்கண்டு பற்கள்ஒளிர, மகிழ்வா என்று - என்றன்
கனவுகளை அன்றாடம் கலைக்கின்றாய்!
         

          இமைகளால் பேசுகின்றாய்; நெழியும் உன்வாய்
          இதழ்களால், புன்முறுவல் ஒழுக ¸ù׸¢ýÈ¡ö!
          இதயம்தரும் உறக்கத்தைக் கெடுக்கின்றாய் - உன்
          முகம்விலகாத என்உணர்வுகளைச் சிறைப்படுத்தி,
          மூளைக்குள்ளும் நுழைந்திட்டாய்!
 
 
         
          என்னதான் நினைக்கின்றாய்; நான் துடிக்க,
           ஏங்கி என்னுள் மயங்கி தினம் - காதல்
           அன்புள் அமிழ்த்திஉன் எழில்மூக்கால்,
           ஆசை கொண்டு கடிக்கின்றாய்!
                                                                   

                                                                                                                                                                        
           புகல்வா னத்ததுள் வந்து சுழலும்,                                                             
           பகல்ஆ தவன்போல் என்னைநீ...
           அகிலமாய்ச் சுழற்றுகின்றாய்!
           நிலவும்போல் இரவில் பூமிநோக்கி நீந்துகின்ற,
           ஒளிநதியை முகிலாய் மூடுகின்றாய்!
  
  நினைவுளில் கிறங்குகின்றாய்; நாம்என்று
  நனவுகளில் ஒன்றிடும் முன்னே,
  இறுக்கம் விலகிநீ மறைகின்றாய்-உன்
  பிரிவைத் தாங்க முடியாமல், ஒவ்வொரு நாளும்
  மரித்திடலாம் என்று நினைத்திட்டாலும்...  
 
            கனவுகளில் திரும்பத் தோன்றி கனவனே! என்று என்று          
             தினமும் தழுவித் தடுக்கின்றாய்!- காதல்,                                                 
             வாழ வேண்டும் என்று தாபத்தோடு - என்னை                                        
             ஆனந்தக் கண்ணீரால் நனைக்கின்றாய்!

 
  By:Anbu shivakumar

No comments:

Post a Comment